நியூயார்க்: கத்திக்குத்தில் படுகாயமடைந்த எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு பொருத்தப்பட்டிருந்த வென்டிலேட்டர் அகற்றப்பட்டது. சாத்தானின் கவிதைகள் என்ற புத்தகத்தை எழுதி பல ஆண்டுகளாக மரண தண்டனை அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வந்த எழுத்தாளர் சல்மான் ருஷ்டி, அமெரிக்காவின் நியூயார்க்கில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது, ஹதி மட்டார் (24) என்ற வாலிபர், சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்தினான். இதில் சல்மானின் கை நரம்பு, கழுத்து, நெஞ்சு, கல்லீரல் ஆகிய உறுப்புகளில் காயம் ஏற்பட்டது.