திருத்தணி: திருத்தணி அடுத்த திருவலாங்காடு அரிச்சந்திராபுறம் கிராமத்தில் வசிப்பவர் சரவணன் (25). இவரது மனைவி தீபா (22). இருவரும் கடந்த 4 வருடங்கள் முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 8 மாதத்தில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தீபாவிற்கு டிபி நோய் தாக்கியது. இதில் வயிற்றில் கட்டி போன்று உருவானது. தீபா, உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார். திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனையில் தீபா சிகிச்சை பெற்று வந்தார்.