கார்தூம்: வடக்கு ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் ராணுவத்திற்கு எதிராக பொதுமக்கள் நடத்தி வரும் வாராந்திர போராட்டத்தில் வன்முறை வெடித்தது. ராணுவம் மற்றும் போலீசார் நடத்திய தாக்குதலில் பலர் காயமடைந்தனர். சூடானின் தலைநகரமான கார்தூமில் குவிந்த இளைஞர்கள், ராணுவ வாகனங்களை சூழ்ந்துக்கொண்டு கற்களை வீசி தாக்குதல் தொடுத்தனர். பதிலுக்கு ராணுவத்தினரும் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே பெரும் மோதல் வெடித்தது. ஜனநாயக ஆட்சி நடந்து வந்த சூடானில் 1989ம் ஆண்டு முதல் உமர் அல்பஷீர் அதிபராக பதவி வகித்து வந்தார். கடந்த 2019ம் ஆண்டு ராணுவ புரட்சி ஏற்பட்டு உமர் அல்பஷீர் ஆட்சியில் இருந்து அகற்றம் செய்யப்பட்டார்.