சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை முதல் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. 75வது சுதந்திர தினவிழா வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது ஆண்டாக தேசிய கொடியை ஏற்றி வைக்கவுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே சென்னை கோட்டை கொத்தளம் எதிரே காலாட்படை, காமண்டோ படை, பெண்கள் படை உள்பட காவல்துறையின் 7 படைகளின் அணிவகுப்பு மற்றும் உதிரிப்படைகளின் அணிவகுப்பு ஒத்திகை இரண்டாம் நாளாக இன்றும் நடைபெற்றது. இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் கிராமிய கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.