காங்கோ: மத்திய ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவில் சிறைக்குள் புகுந்து கிளர்ச்சி அமைப்பினர் கலவரத்தில் ஈடுபட்டதில் 750 கைதிகள் தப்பியோடிவிட்டனர். 5 கைதிகள் கொல்லப்பட்டுள்ளனர். காங்கோ நாட்டின் பிடம்போ நகரில் மத்திய சிறையில் இந்த துணிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சிறையில் மொத்தம் 800 கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். கைதிகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றும் போது திடீரென அங்கு வந்த கூட்டு ஜனநாயக கிளர்ச்சி படையினர், துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் சிறை வளாகம் முழுவதும் கலவர பூமி போல் ஆனது. 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 750 கைதிகள் தப்பியோடிவிட்டனர். சிறையில் தற்போது 50 கைதிகள் மட்டுமே தப்பியோடாமல் உள்ளனர்.