சிவசேனா எம்பிக்கு 14 நாள் நீதிமன்ற காவல்; மும்பை நீதிமன்றம் உத்தரவு

மும்பை:  பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட சிவசேனா எம்பியை 14 நாள் நீதிமன்ற காவலில் வைப்பதற்கு மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவசேனா எம்பி சஞ்சய் ராவத்(60). இவருக்கு  பத்ரா சால் குடிசை சீரமைப்பு திட்டத்தில் பணமோசடியில் தொடர்பு இருப்பதாக புகார் எழுந்தது. இவரது வீட்டில் அதிரடியாக சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஒன்றாம் தேதி ராவத்தை கைது செய்தனர்.

இவரது காவல் முடிவடைந்த நிலையில் நேற்று சிறப்பு நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைப்பதற்கு உத்தரவிட்டார். தனக்கு வீட்டு உணவு மற்றும் மருந்து வழங்க வேண்டும் என்ற சஞ்சயின் மனுவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு அவருக்கு அனுமதி வழங்கி உள்ளது. ஆனால் படுக்கை வசதி குறித்த அவரது வேண்டுகோளை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

Related Stories: