மும்பை: பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட சிவசேனா எம்பியை 14 நாள் நீதிமன்ற காவலில் வைப்பதற்கு மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவசேனா எம்பி சஞ்சய் ராவத்(60). இவருக்கு பத்ரா சால் குடிசை சீரமைப்பு திட்டத்தில் பணமோசடியில் தொடர்பு இருப்பதாக புகார் எழுந்தது. இவரது வீட்டில் அதிரடியாக சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஒன்றாம் தேதி ராவத்தை கைது செய்தனர்.