தாகா: வங்கதேசத்தில் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டதுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வங்கதேசத்தில் கடந்த 5ம் தேதி எரிபொருள் விலையை அரசு உயர்த்தியது. டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலை 42.5 சதவீதமும், பெட்ரோல் மற்றும் ஓக்டேன் விலை முறையே 51.1 மற்றும் 51.7 சதவீதமும் விலை உயர்த்தப்பட்டது. எரிபொருட்கள் விலை உயர்த்தப்பட்டதால் பொது போக்குவரத்து கட்டணமும் வெகுவாக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே எரிபொருள் விலையை குறைக்க வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.