ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் கோயில் ஒன்றின் சிறப்பு பூஜையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்துவிட்டனர். சவான் மாதத்தின் கடைசி திங்கட்கிழமையை வடமாநிலங்களில் மக்கள் புனித நாளாக கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி ராஜஸ்தானில் ஹிகார் நகரில் உள்ள ஷ்யாம்ஜி கோயிலில் அதிகாலை சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பூஜையில் பங்கேற்க அதிகளவில் பக்தர்கள் குவிந்தனர். நேரம் செல்ல செல்ல பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.