புதுச்சேரியில் அரசு சார்பில் கலைஞருக்கு சிலை முதல்வர் ரங்கசாமி உறுதி

புதுச்சேரி: புதுச்சேரி மாநில திமுக சார்பில் கலைஞரின் 4ம் ஆண்டு நினைவு தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதனையொட்டி புதுச்சேரி ஏஎப்டி திடலில் இருந்து சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திமுகவினர் சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், மாநில அமைப்பாளருமான சிவா தலைமையில் ஒதியஞ்சாலை அண்ணா சிலையை நோக்கி பேரணியாக சென்றனர். பின்னர் அண்ணா சிலை அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைஞரின் திருவுருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் சிவா தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் முதல்வர் ரங்கசாமியை அவரது இல்லத்தில் சந்தித்தனர். அப்போது, புதுச்சேரியில் கலைஞரின் திருவுருவச்சிலை அமைக்க வேண்டும் என்று  கோரிக்கை விடுத்தனர். அதற்கு பதில் அளித்த முதல்வர் ரங்கசாமி, கலைஞருக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பும்,  நட்பும் இருந்தது. அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதையும் உண்டு. எனவே  புதுச்சேரி அரசு சார்பில் கலைஞருக்கு புதுச்சேரியில்  சிலை நிறுவப்படும் என உறுதி அளித்தார்.

Related Stories: