தண்டையார்பேட்டை: ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் காடி அப்பள கொண்டா (44), சென்னை காசிமேட்டில் தங்கியிருந்து மீன்பிடி தொழில் செய்துவந்தார். வழக்கம்போல் நேற்று அதிகாலை மீன் பிடிப்பதற்காக புதுவண்ணாரப்பேட்டை மார்க்கெட் பாரம் 4வது தெருவை சேர்ந்த வினோத் குமார் (21) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் செல்ல ஏற்பாடு செய்துள்ளார். பிறகு விசைப்படகில் காடிஅப்பளகொண்டா ஏறும்போது கடலில் தவறி விழுந்ததில் தண்ணீரில் மூழ்கி தத்தளித்துள்ளார்.