கும்மிடிப்பூண்டியில் பரபரப்பு தனியார் குடிசை ஓட்டலில் திடீர் தீ மின்கசிவா? விசாரணை

கும்மிடிப்பூண்டி: குடிசை ஓட்டிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. கும்மிடிப்பூண்டி பஜார் பகுதி சேர்ந்தவர் சங்கர் (45). இவர், கும்மிடிப்பூண்டி ரெட்டம்பேடு சாலையில் குடிசை போட்ட ஓட்டல் நடத்தி வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்ற நிலையில் நேற்று இரவு 9:30 மணிக்கு திடீரென தீப்பற்றி எரிந்தது. அக்கம் பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றனர். ஆனால் தீ கட்டுக்குள் வரவில்லை. தகவலறிந்த கும்மிடிப்பூண்டி தீயணைப்பு வீரர் மாரிமுத்து தலைமையில் 5 பேர் கொண்ட குழு விரைந்து வந்தனர்.

சுமார் அரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதிர்ஷ்டவசமாக ஓட்டலில் இருந்த 3 சிலிண்டர்கள் பாதுகாப்பாக இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்தில் ஓட்டலில் இருந்த பலலட்ச்ம் மதிப்புள்ள பொருட்கள் சாம்பலானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து இது மின்கசிவு காரணமா தீவிபத்து ஏற்பட்டதா? அல்லது சதிச்செயலா? என பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Related Stories: