கும்மிடிப்பூண்டி: குடிசை ஓட்டிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. கும்மிடிப்பூண்டி பஜார் பகுதி சேர்ந்தவர் சங்கர் (45). இவர், கும்மிடிப்பூண்டி ரெட்டம்பேடு சாலையில் குடிசை போட்ட ஓட்டல் நடத்தி வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்ற நிலையில் நேற்று இரவு 9:30 மணிக்கு திடீரென தீப்பற்றி எரிந்தது. அக்கம் பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றனர். ஆனால் தீ கட்டுக்குள் வரவில்லை. தகவலறிந்த கும்மிடிப்பூண்டி தீயணைப்பு வீரர் மாரிமுத்து தலைமையில் 5 பேர் கொண்ட குழு விரைந்து வந்தனர்.