இதனால் ஆட்டு தீவனங்களை அதிக விலை கொடுத்து விவசாயிகள் வாங்கி தங்களது வளர்ப்பு ஆடுகளை பாதுகாத்து வருவதில் பெரும் சிரமங்களையும் சந்தித்து வருகின்றனர். இருப்பினும், கடந்த 2 வாரங்களாக கோயில் திருவிழாக்கள் காரணமாக கிடா வெட்டு விருந்துகளுக்கு ஆடுகள் விலை போனதால் நல்ல விலை கிடைத்தது. கடந்த இரண்டு வாரங்களாக நல்ல விலை கிடைத்ததை நம்பி நடப்பு வாரத்திலும் அதிக அளவில் 6 ஆயிரத்துக்கும் அதிகமான ஆடுகளை லாரிகளில் ஏற்றி வந்த விவசாயிகளுக்கு இந்த வாரம் ஏமாற்றமே கிடைத்தது. இதன் அடிப்படையில், கடந்த வாரங்களில் 10 கிலோ எடை கொண்ட ஒரு ஆட்டின் விலை ரூ.6000 என விற்பனையானது. இந்த வாரம் சற்று விலை குறைந்து 10 கிலோ கொண்ட ஒரு ஆட்டின் விலை ரூ.5500க்கு விற்பனை செய்யப்பட்டது. இது ஆடு வளர்க்கும் விவசாயிகள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
The post கன்னிவாடி சந்தையில் ஆடுகளுக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை appeared first on Dinakaran.