ஆம்பூர் அருகே பாம்பு கடித்து இறந்த மாணவன் சடலத்தை டோலி கட்டி தூக்கி சென்ற மக்கள்

ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அரங்கல்துருகம் ஊராட்சி இருளர் பகுதியை சேர்ந்தவர் சிவா, இவரது மகன் அர்ஜூன் என்கிற அஜீத்குமார்(12). நேற்று முன்தினம் மழையில் நனைந்தபடி அர்ஜூன் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது அவனை பாம்பு கடித்துள்ளது. அக்கம்பக்கத்தினர் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு மாணவன் இறந்தான். பிரேத பரிசோதனைக்குப்பின் சடலத்தை பெற்றுக்கொண்ட அவர்கள் தங்கள் பகுதிக்கு வாகனத்தில் கொண்டு சென்றனர். அவர்கள் வசிக்கும் பகுதி 1 கி.மீ. தூரம் வனப்பகுதி என்பதாலும், சாலை வசதி இல்லாததாலும் இரவு நேரத்தில் விவசாய நிலத்தின் வழியாக டோலி கட்டி, மழையில் சடலத்தை கொண்டு சென்றனர்.

Related Stories: