ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அரங்கல்துருகம் ஊராட்சி இருளர் பகுதியை சேர்ந்தவர் சிவா, இவரது மகன் அர்ஜூன் என்கிற அஜீத்குமார்(12). நேற்று முன்தினம் மழையில் நனைந்தபடி அர்ஜூன் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது அவனை பாம்பு கடித்துள்ளது. அக்கம்பக்கத்தினர் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.