ராஜபாளையம்: ராஜபாளையம் திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில், 12ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னன் குடமுழுக்கு நடத்திய, அருள்மிகு பறவை அன்னம் காத்தருளியசாமி கோயிலில், வரலாற்றுக் கள ஆய்வாளர்கள் நேற்று ஆய்வு நடத்தினர்.ராஜபாளையம் நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி ஏற்பாட்டின் பேரில் ராஜபாளையம்-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அருள்மிகு பறவை அன்னம் காத்தருளியசாமி கோயிலில், வரலாற்றுக் கள ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தினர். இதில் கல்வெட்டில் பல உண்மைகளை கண்டுபிடித்துள்ளனர். கிபி 11ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவில், 12ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னன் மாறவர்மன் சுந்தரபாண்டியன் இந்த கோவிலுக்கு குடமுழுக்கு நடத்தியதாக அந்த கல்வெட்டுகள் மூலம் தெரிய வந்துள்ளது. மேலும், தற்போது உள்ள பறவை அன்னம், காத்திருந்த சுவாமி விக்ரகம் ஏற்கனவே உள்ள ஒரு பாழடைந்த மண்டபத்தில் இருந்ததாகவும் தற்போது பாதுகாப்பு காரணம் கருதி, அந்த மண்டபத்திலிருந்து வேறொரு மண்டபத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.