திருப்பூர் : சமீபத்தில் நடந்த 47வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் ஒன்றிய அரசு அரிசி மீது 5 சதவிதம் வரி விதித்தது. இதனை, திருப்பூர் பகுதி அரிசி வியாபாரிகள் புதுமையான முறையில் எதிர் கொண்டு வருகின்றனர். திருப்பூர் பகுதி அரிசி ஆலைகள் இப்போது 25 கிலோ பைக்கு பதிலாக 26 கிலோ அரிசி பையாக தயாரிக்கின்றனர். ஏனெனில், 25 கிலோ வரையிலான அடைக்கப்பட்ட பிராண்ட் மற்றும் நான் பிராண்ட் அரிசிக்குதான் 5 சதவித வரி விதிப்பு உள்ளது. முன்பு நுகர்வோருக்கு 1000 ரூபாய்க்கு விற்கப்பட்ட 25 கிலோ அரிசி பேக்கிங் வரி விதிப்பிற்கு பிறகு 50 ரூபாய் உயர்ந்து 1050 ரூபாய்க்கு விற்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக வியாபாரம் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது புதிய முயற்சியாக 26 கிலோ அரிசி பேக்கிங் விற்பனைக்கு வரத்துவங்கியுள்ளது.