டெல்லி: நாடாளுமன்ற மக்களவையில் மாணிக்கம்தாகூர், ஜோதிமணி உள்ளிட்ட 4 காங்கிரஸ் எம்.பி.க்களின் இடைநீக்கத்தை ரத்து செய்து, அவைத்தலைவர் உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 2 வாரத்திற்கு முன்பு தொடங்கியது. பெட்ரோல், டீசல் உட்பட விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி விவகாரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்குமாறு எதிர்க்கட்சிகள் விடுத்துவருக்கும் கோரிக்கை தொடர்ந்து நிராகரிக்கப்பட்டது. அதன் ஒருபகுதியாக மக்களவைக்குள் பதாகைகள் ஏந்தி அமளியில் ஈடுபட்டதாக காங்கிரஸ் எம்.பி.க்கள் மாணிக்கம்தாகூர், ஜோதிமணி உள்ளிட்ட 4 காங்கிரஸ் எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.