கோழிக்கோடு: தேசிய திரைப்பட விருதுகள் தேர்வு என்பது கொடூரமான நகைச்சுவையாகிவிட்டது என்று கேரள சினிமா இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார். கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இந்திய திரைப்பட சங்கங்களின் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஜான் ஆபிரகாம் விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற திரைப்பட இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் பேசுகையில், ‘தேசிய திரைப்பட விருதுக்கான நடுவர் குழுவில் சிறந்த திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் விமர்சகர்கள் இருந்தனர். ஆனால் இப்போது அவ்வாறு இல்லை. நடுவர் பெயரை கேள்விப்பட்டதே இல்லை.