விழுப்புரம் : விழுப்புரத்தில் ரூ.4.30 கோடியில் சிறுபாலம், மழைநீர் வடிகால் வாய்க்கால் கட்டும் பணியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். விழுப்புரம் நகராட்சியில் நெடுஞ்சாலை துறையின் மூலம் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பாலங்கள் மற்றும் மழைநீர் வடிகால் வாய்க்கால் கட்டும் பணி நடைபெற்று வருவதை ஆட்சியர் மோகன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது ஆட்சியர் கூறியதாவது, தற்போது மழைக்காலமாக உள்ளதால் பணியை விரைந்து முடிப்பதுடன், மேலும் இது நகரின் முக்கிய பகுதியாக உள்ளதால் பொதுமக்களுக்கு சிரமமின்றி பணியை விரைந்து முடித்து சாலையை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார்.