சிவகாசி:சிவகாசி மாநகராட்சியாக மாறிய பிறகும் பெரும்பாலான பெயர் பலகைகள் மாற்றப்படாமல் நகராட்சி என்றே உள்ளது. இதனை மாற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பட்டாசு என்றாலே, சிவகாசி தான், நினைவுக்கு வரும்; இதை, ‘குட்டி ஜப்பான்’ என்பர். இந்த பெயரில் முதலில் அழைத்தவர், நம் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருதான். தீப்பெட்டி தயாரிப்பு, அச்சுத் தொழில், பட்டாசு தயாரிப்பு என, பம்பரமாக சுழல்கிறது சிவகாசி நகரம். பெருமை இந்த சிவகாசி நகரம் கடந்த ஆண்டு சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. சிவகாசி நகராட்சியோடு திருத்தங்கல் நகராட்சி இணைக்கப்பட்டு சிவகாசி மாநகராட்சியாக அரசாணை வெளியிடப்பட்டது.