லண்டன்: உலகையே வீட்டிற்குள் முடக்கிப்போட்ட கொரோனா பேரிடர்காலத்தில் குடும்பதிற்கென பிரத்யேகமாக சிறிய ரக விமானம் ஒன்றை தயாரித்து அசத்தியுள்ளார் லண்டனில் வாழும் இந்திய வம்சாவளி இளைஞர். தாம் தயாரித்த விமானத்தில் மனைவி, மகள்களுடன் தற்போது ஐரோப்பாவில் உற்சாகமாக வலம் வருகிறார். கொரோனா பேரிடர் காலத்தில் சுமார் ஈராண்டுகள் வீட்டிற்குள் முடங்கிய பலரும் யூ டியூப் பார்த்து புது புது உணவுகளை தயாரித்து ருசித்து மகிழ்ந்த போது லண்டனில் வசித்த இந்திய வம்சாவளியை சேர்ந்த அசோக் என்பவர் அதே யூ டியூப் உதவியுடன் குடும்பத்திற்காக பிரத்யேகமாக விமானம் ஒன்றை தயாரித்துள்ளார். கேரள மாநிலம் ஆலப்புழாவை பூர்விகமாக கொண்ட அவர் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டில் பொறியாளராக பணிபுரிகிறார். கொரோனா ஊரடங்கில் ஆலைகள் முடங்கியதால் கிடைத்த கால அவகாசத்தில் வீட்டிலிருந்த படியே விமான தயாரிப்பு கையேடுகள், யூ டியூப் விடியோக்கள் ஆகியவற்றின் கைக்கொண்டு சிறிய ரக விமானத்தையே அவர் உருவாக்கியுள்ளார்.