நாகை: சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நாளை தொடங்க இருக்கும் நிலையில், நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே சலூன் கடையை நடத்தி வரும் இளைஞர் ஒருவர் தனது கடையையே செஸ் பலகையாக மாற்றி, அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தலைஞாயிறு ஓரடியம்புலம் கிராமத்தில் கடந்த 15 ஆண்டுகளாக சலூன் கடை வைத்து நடத்தி வருபவர் செந்தில்குமார். மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 44வது ஒலிம்பியாட் செஸ் போட்டியை கருத்தில் கொண்டு தனது சலூன் கடையையே ரூ.20 ஆயிரம் கொண்டு செலவு செய்து செஸ் பலகை வடிவில் வண்ணம் தீட்டி, பலருக்கும் அந்த விளையாட்டு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.