திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பாலக்காடு அருகே ரூ.10,000 வாங்கிய பிறகும் பெண் பார்த்து கொடுக்காததால் ஆத்திரமடைந்த வாலிபர், திருமண புரோக்கரை வீடு புகுந்து கத்தியால் குத்திக் கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கேரள மாநிலம் பாலக்காடு அருகே கொப்பம் குலுக்கல்லூர் பகுதியை சேர்ந்தவர் அப்பாஸ் (60). திருமண புரோக்கர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெல்லாயா என்ற பகுதியை சேர்ந்த முகமது அலி (40) என்பவர் தனக்கு பெண் பார்க்க வேண்டும்’ என அப்பாசை அணுகினார். அதற்கு அவர் கமிஷனாக ரூ.10,000 வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு முகமது அலி சம்மதித்து பணத்தை கொடுத்துள்ளார். பல மாதங்களாகியும் அப்பாஸ் பெண் பார்த்து கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது முகமது அலிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.