ஓசூரில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பற்றி எரிந்தது

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த சதாசிவம் (42), 2 குழந்தைகளை பள்ளியில் விடுவதற்காக நண்பர் ஒருவரின் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் நேற்று காலை சென்றுகொண்டிருந்தார். அப்போது, திடீரென எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் இருந்து புகை வந்தது. இதனை பின்னால் வந்த நபர் அவரிடம் கூறினார். உடனடியாக சதாசிவம் ஸ்கூட்டரை நிறுத்தினார். அப்போது, திடீரென வாகனம் தீப்பற்றி எரிந்தது. அருகில் இருந்தவர்கள் உடனடியாக தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இதில் சதாசிவம் மற்றும் 2 குழந்தைகள் காயமின்றி தப்பினர்.

Related Stories: