பரத்பூர்: ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தில் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 500 நாட்களுக்கும் மேலாக சுவாமி விஜய் தாஸ் (65) என்பவர் போராட்டம் நடத்தி வந்தார். இந்த போராட்டத்திற்கு தீர்வு எட்டப்படாத நிலையில், அவர் நேற்று முன்தினம் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அதன்படி அவரது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளித்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஆபத்தான நிலையில் சப்தர்ஜங் மருத்துவருமனையில் அனுமதித்தனர். கிட்டத்தட்ட 80 சதவீத தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவந்த சுவாமி விஜய் தாஸ், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இவரது தற்கொலை சம்பவம், ராஜஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.