புதுடெல்லி: உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் சிவ பக்தர்களின் ‘கன்வர்’ யாத்திரை நடைபெற்று வருகிறது. கங்கை நதி கரைகளுக்கு யாத்திரையாக சென்று புனித நீர் எடுத்து வந்து தங்கள் சொந்த ஊர் மற்றும் வீட்டில் உள்ள சிவன் சிலைக்கு அபிஷேகம் செய்வர். இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் இருந்து ‘கன்வர்’ யாத்திரை புறப்பட்ட பக்தர்களில் 6 பேர், உத்தர பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தை கடந்த போது லாரி மோதிய விபத்தில் பலியாகினர். மேலும் மற்றொருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.