மதுராந்தகம்: சோத்துப்பாக்கம் ஊராட்சியில் திரவுபதி அம்மன் கோயிலில் 154ம் ஆண்டு அக்னி வசந்த விழாவில், துரியோதனன் நிகழ்ச்சி நடந்தது. செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூர் அடுத்துள்ள சோத்துப்பாக்கம் ஊராட்சியில் திரவுபதி அம்மன் கோயில் உள்ளது. இங்கு, 154ம் ஆண்டு அக்னி வசந்த விழா நேற்று முன்தினம் நடந்தது. இந்த திருவிழாவை முன்னிட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. இதனை தொடர்ந்து தருமர் ஜனனம், திரவுபதி ஜனனம், திரவுபதி கல்யாணம், சுபத்ரா கல்யாணம், ராஜசுய யாகம், பார்த்திபன் பாசுபதம், குறவஞ்சி, விராட பருவம், கிருஷ்ணன் தூது, கர்ண மோட்சம் உட்பட பல்வேறு நிகழ்வுகள் தினம் தோறும் இந்த கோயில் வளாகத்தில் நடைபெற்று வந்தது.