நாகர்கோவிலில் இருந்து மும்பைக்கு கடத்திய ரூ.2 கோடி மதிப்பிலான திமிங்கல உமிழ்நீர் பறிமுதல்: 6 பேர் கைது

நாகர்கோவில்: நாகர்கோவில் ரயிலில் கடத்தப்பட்ட ரூ.2 கோடி மதிப்பிலான அம்பர்கிரீஸ் எனப்படும் திமிங்கலத்தின் உமிழ்நீரை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். நாகர்கோவிலில் இருந்து மும்பைக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் திமிங்கலத்தின் உமிழ்நீரை  (அம்பர்கிரீஸ்) வாலிபர் ஒருவர் கடத்தி செல்வதாக வனத்துறை அதிகாரிகளுக்கு  தகவல் வந்தது.

அதன் பேரில் நேற்று காலை ரயில் நிலையம் சென்ற  வனத்துறையினர், ரயில்வே போலீசாருடன் இணைந்து  சம்பந்தப்பட்ட ரயிலில் சோதனை மேற்கொண்டனர். அப்போது குளிர்சாதன வசதி ெகாண்ட முன் பதிவு பெட்டியில் பயணம் செய்த தினகரன் (36) என்பவரிடம் சுமார் 2 கிலோ எடை கொண்ட திமிங்கலத்தின் உமிழ்நீர் இருப்பது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.2 கோடி. அவரிடம் நடந்த விசாரணையை தொடர்ந்து மேலும் 5 பேரை பிடித்தனர்.  அவர்களிடம் திமிங்கலத்தின் உமிழ் நீர் எப்படி கிடைத்தது? என்பது தொடர்பாக விசாரணை நடந்தது. இதில் குளச்சல் பகுதியில் இருந்து இதை வாங்கியதாக கூறி உள்ளனர். மேற்கண்ட 6 பேரையும் கைது செய்து, நேற்று வனத்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Related Stories: