ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டையில் மண்ணடி மாரியம்மன் கோயில் ஜாத்திரை திருவிழா நடந்தது. இதில், பெண்கள், சிறுவர்கள் வேப்பிலை ஆடை அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் கிராம தேவதையான மண்ணடி மாரியம்மன் கோயில் ஜாத்திரை திருவிழா கடந்த 17 தேதி தொடங்கியது. அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் வரை செல்லியம்மன் கோயில் வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைத்து வழிப்பட்னர். இதற்கு முன்னதாக, செல்லியம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதே நாள் மாலை அங்காளம்மன் மற்றும் எல்லையம்மன் கோயிலிலும் பொங்கல் வைத்து வழிபட்டனர். பின்னர் தொடர்ந்து 3 நாட்கள் கரக ஊர்வலம் நடைபெற்றது.