குன்னூர்: குன்னூரில் தொடர் மழை எதிரொலியாக கேத்ரீன் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் காட்சி, பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கிறது. நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கடும் குளிர் காரணமாக, பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், கடும் பனி மூட்டம் காரணமாக குன்னூர் -மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் வாகனங்களில் முகப்பு விளக்கை எரியவிட்டு பயணிகள் மெதுவாக சென்றன.
அதிகாலை வேளையில் கடும் குளிர் நிலவுவதால் கேரட் அறுவடை உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள முடியாமல் தொழிலாளர்கள் அவதிப்பட்டனர்.