கொழும்பு: கோத்தபய நாட்டை விட்டு ஓடிய நிலையில் இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுக் கொண்டார். இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால், விலைவாசி உயர்ந்து, மக்கள் கடுமையாக பாதித்துள்ளனர். இதற்கு காரணமான அதிபர் கோத்தபய, பிரதமர் மகிந்த ராஜபக்சேவை பதவி விலக வலியுறுத்தி அதிபர், பிரதமர் மாளிகைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால், அதிபர் கோத்தபய, மகிந்த ராஜபக்சே, அமைச்சர்களாக இருந்த சமல், பசில் மற்றும் நமல் ராஜபக்சேக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர்.நாட்டை விட்டு ஓடி சிங்கப்பூரில் தஞ்சம் அடைந்துள்ள கோத்தபய, இடைக்கால அதிபராக ரணிலை நியமித்து, தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பினார். இதையடுத்து, இடைக்கால அதிபராக ரணில் பொறுப்பேற்றார். இந்நிலையில், புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடந்தது.