காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தை தூய்மை நகரமாக மாற்றுவதே நோக்கம் என தூய்மை பணியை ஆய்வு மேற்கொண்டு காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் கண்ணன் தெரிவித்தார்.காஞ்சிபுரம் மாநகராட்சியில் 40 தூய்மை பணியாளர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் உள்ளனர். இவர்கள் மூலம் இரவு நேர தூய்மை பணி கடந்த 15 நாட்களாக நடந்து வருகிறது. இரவு நேரங்களில் தூய்மை பணி மேற்கொள்வதால் பெருமளவில் குப்பை அகற்றப்பட்டு கிடங்கில் சேர்க்கப்படுகிறது. இதன் மூலம் பெருமளவு குப்பை தேக்கத்தை குறைக்க முடிகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் கண்ணன், பேருந்து நிலையம், காமராஜர் சாலை, காந்தி சாலை உள்ளிட்ட பகுதிகளில் தூய்மை பணியாளர்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.