பொள்ளாச்சி : பொள்ளாச்சி சந்தைக்கு கேரள வியாபாரிகள் வருகை குறைவால், மாடு விற்பனை மந்தமானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சியில் வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் நடைபெறும் மாட்டு சந்தைக்கு வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்தும், மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இதனை, கேரள வியாபாரிகளே அதிகம் வங்கி செல்கின்றனர். கடந்த வாரத்தில் கர்நாடக, ஆந்திரா மாநிலத்திலிருந்து மாடுகள் வரத்து இல்லாமல், உள்ளூர் பகுதி மாடுகளே விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. இருப்பினும் மழையால் விற்பனை மந்தமானது.