திருவள்ளூர்: கடம்பத்தூர் ஒன்றியம் கூவம் கிராமத்தில் உள்ள திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீதிரிபுராந்தக சுவாமி கோயிலில் வரும் 22ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி வரை ஆடிப்பூர பிரமோற்சவ திருவிழா நடைபெற உள்ளது. கடம்பத்தூர் ஒன்றியம் கூவம் கிராமத்தில் உள்ள திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீதிரிபுராந்தக சுவாமி திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலில் வருகிற 22ம் தேதி காலை பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனைத்தொடர்ந்து 23ம் தேதி துர்கா, லஷ்மி, சரஸ்வதி ஆகியோர் பவழக்கால் சப்பரம் திரிபுரசுந்தரி அம்மன் பூதவாகனம், 24ம் தேதி மயில் வாகனம், 25ம் தேதி நாக வாகனம், 26ம் தேதி ரிஷப வாகனம், வீதி உலா நடைபெற உள்ளது.