ஆவடி: ஆவடி மாநகராட்சி பகுதியில் புதிய மின்கம்பங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆவடி மாநகராட்சி பகுதிகளில் பல இடங்களில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் அந்த பகுதியில் பழுதான மின்கம்பங்கள் அப்படியே கிடப்பதால் மழைநீர் கால்வாயை சீரமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டது. மின்சார துறை அலட்சியத்தால் கால்வாய் கட்டும் பணி மிகவும் தாமதமாக நடைபெற்று வந்தது. உடனே மின்சாரத்துறை அதிகாரிகள் தலையிட்டு இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். மேலும் அரசு அதிகாரிகள் அலட்சியத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொதுமக்கள் அவசர தேவைக்கு கடந்து செல்ல முடியாத நிலை இருந்தது. எனவே உடனடியாக இதற்கு தீர்வு காண வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.