காலே: பாகிஸ்தான் அணியுடனான முதல் டெஸ்டில், இலங்கை அணி வலுவான முன்னிலை பெற்றுள்ளது. காலே சர்வதேச ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 222 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. சண்டிமால் 76 ரன் விளாசினார்.அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி 218 ரன்னுக்கு சுருண்டது (90.5 ஓவர்). சக வீரர்கள் பெரிதாக ஒத்துழைக்காவிட்டாலும், அபாரமாக விளையாடிய கேப்டன் பாபர் ஆஸம் சதம் விளாசினார் (119 ரன், 244 பந்து, 11 பவுண்டரி, 2 சிக்சர்). இலங்கை பந்துவீச்சில் பிரபாத் 5 விக்கெட் வீழ்த்தினார். 4 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை, 2ம் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 36 ரன் எடுத்திருந்தது. ஒஷதா 17 ரன், ரஜிதா 3 ரன்னுடன் நேற்று 3ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர்.