புதுடெல்லி: ‘கியூட் பொது நுழைவுத் தேர்வை தவற விட்ட மாணவர்களுக்கு மறு வாய்ப்பு வழங்க முடியாது,’ என பல்கலைக் கழக மானியக் குழு (யுஜிசி) தலைவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 45 ஒன்றிய பல்கலைக் கழகங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கான முதல் கட்ட ‘கியூட்’ கட்ட பொது நுழைவுத் தேர்வு நேற்று முன்தினம் நடைபெற்றது. இத்தேர்வில் கடைசி நேரத்தில் சில தேர்வு மையங்கள் மாற்றப்பட்டதால், மாணவர்கள் பலர் தேர்வு எழுத முடியாமல் தவற விட்டனர். தேர்வை தவறவிட்ட இந்த மாணவர்களுக்கு, ஆகஸ்ட்டில் நடக்கும் 2ம் கட்ட தேர்வின்போது மறுவாய்ப்பு வழங்கப்படும் நேற்று முன்தினம் தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் கூறியதாக தகவல்கள் வெளியாகின.