புதுடெல்லி: கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ சீன ராணுவ வீரர்கள் முயன்றனர். அதை தடுத்தபோது ஏற்பட்ட பயங்கர மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த மோதலை அடுத்து லடாக் எல்லையில் இரு நாட்டு படைகளும் குவிக்கப்பட்டன. பதற்றத்தைக் குறைக்க, இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டன. இதுவரை ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்தில் 15 சுற்று பேச்சுவார்த்தை நடந்து உள்ளன. இதனால் இருதரப்பிலும் எல்லையில் படைகள் குறைக்கப்பட்டன.