புதுடெல்லி: காணொலி காட்சி மூலம் இந்தியா, இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா ஆகிய 4 நாடுகள் கலந்து கொள்ளும் உச்சி மாநாடு நாளை நடைபெறுகிறது. இந்தியா, இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா ஆகிய 4 நாடுகள் ‘ஐ2யு2’ என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள நாடுகளின் அமைப்பானது, நீர், எரிசக்தி, போக்குவரத்து, விண்வெளி, சுகாதாரம், உணவு பாதுகாப்பு ஆகிய 6 துறைகளில் கூட்டு முதலீட்டினை ஊக்கப்படுத்தும் திட்டங்களை உருவாக்கும். அதன்படி இந்த அமைப்பின் முதல் உச்சி மாநாடு காணொலி காட்சி வழியாக நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.