புதுடெல்லி: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பல்வேறு மனுக்களின் கேள்விக்கு ஒன்றிய தத்தெடுப்பு வள ஆதார மையம் அளித்துள்ள பதிலில், ‘கடந்த 2018ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளில் மாநில அரசுகளின் சிறப்பு தத்தெடுப்பு மையங்களில் சுமார் 819 குழந்தைகள் இறந்துள்ளன. இதில் பெரும்பாலானவை இரண்டு வயதுக்குட்பட்டவை. இதில் 481 பெண் குழந்தைகள் மற்றும் 129 குழந்தைகள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் கவனிப்பு தேவைப்படும் குழந்தைகள் ஆகும். 2018-2019ம் ஆண்டில் 251 குழந்தைகள் இறந்துள்ளன.