திருப்புவனம்: திருப்புவனம் அரசு மருத்துவமனையில் காயமடைந்த கர்ப்பிணி பெண்ணிற்கு சிகிச்சை அளிக்க மறுத்து, பணியில் இருந்த டாக்டர் ஸ்டூலை எட்டித் தள்ளிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.சிவகங்ைக மாவட்டம், திருப்புவனம், ரயில்வே பீடர் ரோட்டை சேர்ந்த காசி விஸ்வநாதன் மனைவி சவுந்தர்யா(24). கர்ப்பிணியான இவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன் இரவு, கால் பெருவிரலில் அடிபட்டுள்ளது. திருப்புவனம் அரசு மருத்துவமனை சென்ற போது அங்கு பணியில் இருந்த டாக்டர் பாலகிருஷ்ணன், சவுந்தர்யாவை வெளியே காக்க வைத்து விட்டு செல்போனை பார்த்துக் கொண்டே இருந்துள்ளார்.