சென்னை: இத்தனை ஆண்டுகளாக ஓ.பன்னீர்செல்வதுடன் பயணித்தது வெட்கமாகவும், வேதனையாகவும் உள்ளது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்திருக்கிறார். அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்னை எழுந்ததில் இருந்து ஓபிஎஸ், இபிஎஸ் இடையே மோதல் போக்கு உருவானது. தற்போது இந்த மோதல் போக்கு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அதிமுகவை கைப்பற்றும் வகையில் 2 பேரும் தனித்தனியாக உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்துக்கு சென்று வழக்கு தொடுத்து வருகின்றனர். இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, கோடநாடு வழக்கு விவகாரத்தில் தனது மகனையே அம்பாக எய்தி பேச வைக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.
