டெல்லி: நுபுர் சர்மா விவகாரம் தொடர்பாக இந்தியா மீது ஹேக்கர்கள் சைபர் தாக்குதலை தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவின் செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா, நிகழ்ச்சி ஒன்றில் இஸ்லாமிய இறைத்தூதர் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், பாஜகவில் இருந்து அவர் நீக்கப்பட்டார். இருப்பினும் இந்த விவகாரம் முடிவுக்கு வராத நிலையில், நுபுர் சர்மாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்தியா மீது ஹேக்கர்கள் சைபர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.