மதுரை: மதுரை மாவட்டத்தில் ஜனவரி முதல் மே மாதம் வரை மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கப்படும் என ஐகோர்ட் கிளையில் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மதுரை மாவட்டம், பாலமேடு அருகே பள்ளபட்டியை சேர்ந்த மகாராஜன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘எங்கள் ஊரில் உள்ள முத்தாலம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜூலை 15ல் வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி கேட்டோம். பாலமேடு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இதை ரத்து செய்து, அனுமதியும், உரிய பாதுகாப்பும் வழங்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.