திருவள்ளூர்: கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், கசவநல்லாத்தூரில் துணை மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த துணை மின்நிலையத்தில் உயர் அழுத்த 10 மெகாவாட் திறன் கொண்ட மின்மாற்றி மூலம் 40க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், குறைந்த மின்னழுத்தம் காரணமாக விவசாய கிணறுகளின் மோட்டார், வீடுகளில் வீட்டு உபயோகப்பொருட்கள் பழுதாகும் நிலையேற்பட்டது. இதனால் தடையின்றி மின்விநியோகம் செய்யும் வகையில் உயர் அழுத்த மின்மாற்றி அமைக்க திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ வி.ஜிராஜேந்திரனிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அந்த கோரிக்கையை ஏற்று கட்டாயம் புதிய மின்மாற்றி அமைக்கப்படும் என அவர் உறுதியளித்தார். அதன் அடிப்படையில் எம்எல்ஏ தொடர்ந்து மின்வாரியத்திடம் வலியுறுத்தியதன்பேரில் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், கசவநல்லாத்தூரில் துணை மின்நிலையத்தில் புதிதாக உயர் அழுத்த 16 மெகாவாட் திறன் கொண்ட உயர் அழுத்த மின்மாற்றி அமைக்கவும், இதற்காக ஒரு கோடியே 19 லட்சத்து 31 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவிட்டது.