அம்பத்தூர்: வில்லிவாக்கம் அடுத்த ஐசிஎப் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த 15 வயது மாணவி 10ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வரும் 16 வயது மாணவனும், மாணவியும் நட்பாக பழகி வந்துள்ளனர். நாளடைவில் காதலாக மாறியுள்ளது. பள்ளி விடுமுறை நாளில் மாணவியை மாணவன் பல இடங்களுக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. மேலும் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி மாணவியை பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். இந்த நிலையில் மாணவி அடிக்கடி வாந்தி எடுத்துள்ளார்.