சின்னமனூர் : சின்னமனூர் அருகே ஹைவேஸ், மேகமலை உள்ளிட்ட ஏழு மலைக்கிராமங்களில் பணப் பயிர்களான தேயிலை, ஏலம், மிளகு, காப்பி உள்ளிட்ட விசாயம் அதிகளவில் நடந்து வருகிறது. சுமார் 1.50 லட்சம் ஏக்கரளவில் அடர்ந்த வனப்பகுதிக்குள் வனவிலங்குகள் அதிகளவு வாழ்ந்து வருகிறது. இதனால், மேகமலை வன உயிரின சரணாலயமாக விளங்கி வருகிறது. இதனால், இந்த மலைப்பகுதி தொடர்ந்து மத்திய வன பாதுகாப்பு துறை சட்டத்தின் கீழ் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த வனங்களுக்குள் யானைகள், காட்டு மாடுகள், காட்டுப்பன்றிகள், சிறுத்தை உள்ளிட்ட பல விலங்கினங்கள் சர்வ சாதாரணமாக சாலைகளில் உலா வருகின்றன.