புதுடெல்லி: இந்தியாவில் முப்படைகளுக்கும் அக்னிபாத் திட்டத்தின் கீழ், 4 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் வீரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்களும், வன்முறைகளும் நடைபெற்ற போதிலும், இத்திட்டத்தை ஒன்றிய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், பாதுகாப்பு அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற ஆலோசனைக் குழு கூட்டம் வரும் 11ம் தேதி நாடாளுமன்றத்தில் நடைபெற உள்ளது.