கடலூர்: கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே அரசு பள்ளி 10ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள ஆவினங்குடி அரசு பள்ளியில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவி கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது ஆண் நண்பருடைய பிறந்தநாள் விழாவுக்கு சென்றுள்ளார். பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட புகைப்படங்களை வைத்து மாணவியை மிரட்டி தங்கள் வீட்டிற்கு வரவைத்து 3 மாணவர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மாணவர்கள் பாலியல் பலாத்காரம் செய்ததை சக மாணவர்கள் வீடியோ எடுத்து சக மாணவர்களுக்கு அனுப்பியுள்ளனர்.