தர்மபுரி: பென்னாகரம் அருகே வனத்தை ஒட்டிய கிராமத்திற்குள் புகுந்த 2 யானைகளை வனத்துறையினர் விரட்டியடித்தனர். அந்த யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டுவனஅள்ளி ஊராட்சி பவளந்தூர் கிராமத்தை ஒட்டி ஒகேனக்கல் வனப்பகுதியின் ஒருபகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து அவ்வப்போது யானைகள் வெளியேறி வனத்தை ஒட்டிய கிராமங்களிலும், விளை நிலங்களிலும் நுழைவது வழக்கம். இந்நிலையில், நேற்று வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 2 யானைகள் பவளந்தூர் கிராமத்திற்குள் நுழைந்தது. பின்னர் அங்குள்ள விளை நிலங்களில் நுழைந்தது.