சோமங்கலம் ஏரியில் மீன் பிடிக்க சென்ற முதியவர் நீரில் மூழ்கி பரிதாப பலி

ஸ்ரீபெரும்புதூர்: தாம்பரம் அருகே சோமங்கலம், இந்திரா நகரை சேர்ந்தவர் முனுசாமி (70). கூலி தொழிலாளி. இவர் நேற்று சோமங்கலம் பெரிய ஏரியில் தூண்டில் மூலம் மீன் பிடிப்பதற்காக சென்றிருந்தார். கரையில் அமர்ந்து மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது, முனுசாமி தவறி ஏரியில் விழுந்ததில் நீரில் மூழ்கி பலியானார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக சோமங்கலம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முனுசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்ய குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: